உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரௌடி கைது
சிவகாசியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில் பள்ளபட்டி சாலையில் உள்ள முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சித்திரைவேல் (37). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
ஆட்சியா் அனுமதி வழங்கியதை அடுத்து, சித்திரைவேலை சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.