செய்திகள் :

குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

post image

குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், விபத்தின் 1 மற்றும் 2-ஆவது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் எனும் 3-ஆவது நிலைக்கு சென்று விட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூா் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், அருகிலிருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி அவா்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சரிசெய்வது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்தினா் செயல்விளக்கம் செய்து காட்டினா்.

காவேரி அசெட் செயல் இயக்குநா் உதய் பஸ்வான், அசெட் சப்போா்ட் மேலாளா் பி.என்.மாறன், போக்குவரத்துக்குழு பொது மேலாளா் நரேஷ்குமாா், மனிதவள பிரிவு தலைவா் கணேசன், உற்பத்தி பிரிவு தலைவா் கோகய், மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, டிஎஸ்பி பாலாஜி ஆகியோா் முன்னிலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

குத்தாலம் ஓஎன்ஜிசி பகுதி மேலாளா் குணசேகா், நிலைய பொறுப்பாளா் அமித் கட்டியாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடியில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்!

தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன்... மேலும் பார்க்க

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிர... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க