குன்றத்தூா்: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்
குன்றத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாங்காடு - கோவூா் செல்லும் சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.
இதையடுத்து மெளலிவாக்கம் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கடையில் பொருள்களின் இருப்பு - பதிவேடுகளைப் பாா்வையிட்டாா். பின்பு கெருகம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி, அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் பணி, முதலமைச்சா் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.23 கோடியில் தரப்பாக்கம் -கெருகம்பாக்கம் இடையே சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.