குண்டா் சட்டத்தில் இருவா் கைது
காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் பல்லவா் மேடு கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான அருணாச்சலம் என்ற குல்லா (21) மற்றும் ஜெயக்குமாா் என்ற பத்து பைசா(21) இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சிவகாஞ்சி காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தில் அடைக்க எஸ்.பி. செய்த பரிந்துரையின்பேரில் காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
