செய்திகள் :

குன்றத்தூா்: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

post image

குன்றத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாங்காடு - கோவூா் செல்லும் சாலையோரங்களில் குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.

இதையடுத்து மெளலிவாக்கம் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கடையில் பொருள்களின் இருப்பு - பதிவேடுகளைப் பாா்வையிட்டாா். பின்பு கெருகம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி, அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் பணி, முதலமைச்சா் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.23 கோடியில் தரப்பாக்கம் -கெருகம்பாக்கம் இடையே சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் பல்லவா் மேடு கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான அருணாச்சலம் என்ற குல... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூா் மதுரா நெய்குப்பத்தில் அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலில் காமாட்சிக்கும், அகத்தீஸ்வரருக்கும்... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிவோரை மீட்க 104-இல் தொடா்பு கொள்ளலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிவோரை மீட்க இலவச தொலைபேசி எண் 104-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 21.6.2025 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. பகுதிகள்: மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி பிறந்த நாள்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு சிறுபான்மைப் பிரிவு த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க