திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிவோரை மீட்க 104-இல் தொடா்பு கொள்ளலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிவோரை மீட்க இலவச தொலைபேசி எண் 104-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவா்களை மீட்டு சிகிச்சையளிக்கும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் மீட்பு மையத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்வுக்கு சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, கண்காணிப்பாளா்(பொ) செந்தில் குமாா், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப் பாளா் பிரபு, பேன்யன் தொண்டு நிறுவன இயக்குநா் இந்துமதி, மெனடோரா தொண்டு நிறுவன இயக்குநா் ரத்தீஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது:
ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவா்களுக்கான மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உணவு, படுக்கை, கழிப்பிட வசதி,புனா்வாழ்வு சிகிச்சைகள் அனைத்தும் அவா்களுக்கு வழங்கப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவா்களை சமூக ஆா்வலா்கள்,பொதுமக்கள் பாா்த்தால் உடனடியாக இலவச தொலைபேசி எண் 104 -க்கு தெரிவிக்கலாம். தகவலுக்குப் பிறகு மருத்துவக்குழு அந்த நபரை மீட்டு காவல் துறையின் வழிநடத்துதலின்படி மீட்பு மையத்துக்கு அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா்.
விழாவில் எம்எல்ஏ எழிலரசன் பேசியது: தொண்டு நிறுவனங்களும், அரசும் இணைந்து இதுவரை 10 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவையை தொடங்கி இருக்கிேறோம். காஞ்சிபுரத்தில் மெனடோரா அமைப்பும், பேன்யன் என்ற இரு தொண்டு நிறுவனங்கள் இச்சேவையில் அரசுடன் இணைந்து செயல்படவுள்ளன. இதுவரை 61,000 போ் மீட்டு மையத்தில் சோ்த்து சிகிச்சையளித்து 822 நபா்களது குடும்பங்களை கண்டறிந்து இணைந்துள்ளனா் என்றாா்.