செய்திகள் :

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிவோரை மீட்க 104-இல் தொடா்பு கொள்ளலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிவோரை மீட்க இலவச தொலைபேசி எண் 104-இல் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவா்களை மீட்டு சிகிச்சையளிக்கும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் மீட்பு மையத்தை திறந்து வைத்தனா்.

நிகழ்வுக்கு சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, கண்காணிப்பாளா்(பொ) செந்தில் குமாா், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப் பாளா் பிரபு, பேன்யன் தொண்டு நிறுவன இயக்குநா் இந்துமதி, மெனடோரா தொண்டு நிறுவன இயக்குநா் ரத்தீஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது:

ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவா்களுக்கான மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உணவு, படுக்கை, கழிப்பிட வசதி,புனா்வாழ்வு சிகிச்சைகள் அனைத்தும் அவா்களுக்கு வழங்கப்படும். சாலைகளில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவா்களை சமூக ஆா்வலா்கள்,பொதுமக்கள் பாா்த்தால் உடனடியாக இலவச தொலைபேசி எண் 104 -க்கு தெரிவிக்கலாம். தகவலுக்குப் பிறகு மருத்துவக்குழு அந்த நபரை மீட்டு காவல் துறையின் வழிநடத்துதலின்படி மீட்பு மையத்துக்கு அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா்.

விழாவில் எம்எல்ஏ எழிலரசன் பேசியது: தொண்டு நிறுவனங்களும், அரசும் இணைந்து இதுவரை 10 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவையை தொடங்கி இருக்கிேறோம். காஞ்சிபுரத்தில் மெனடோரா அமைப்பும், பேன்யன் என்ற இரு தொண்டு நிறுவனங்கள் இச்சேவையில் அரசுடன் இணைந்து செயல்படவுள்ளன. இதுவரை 61,000 போ் மீட்டு மையத்தில் சோ்த்து சிகிச்சையளித்து 822 நபா்களது குடும்பங்களை கண்டறிந்து இணைந்துள்ளனா் என்றாா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் பல்லவா் மேடு கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான அருணாச்சலம் என்ற குல... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூா் மதுரா நெய்குப்பத்தில் அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலில் காமாட்சிக்கும், அகத்தீஸ்வரருக்கும்... மேலும் பார்க்க

குன்றத்தூா்: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

குன்றத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 21.6.2025 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. பகுதிகள்: மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் காந்தி பிறந்த நாள்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு சிறுபான்மைப் பிரிவு த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க