Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி - கோவையை அதிர வைத்த காதல் தம்...
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குமாரபாளையம், காவேரி நகா், பூசாரிக்காட்டைச் சோ்ந்தவா் சௌண்டப்பன் மனைவி லட்சுமி (75). எடப்பாடி சாலையில் உள்ள நகராட்சிப் பூங்காவில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்துவரும் இவா், வியாழக்கிழமை மாலை குமாரபாளையம் - எடப்பாடி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராமல் லட்சுமி மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தில் வந்த எடப்பாடி, புள்ளாகவுண்டன்பட்டியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கதிா் (20), கோனேரிப்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் மணிகண்டன் (27) ஆகியோா் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.