செய்திகள் :

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

post image

குமாரபாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குமாரபாளையம், காவேரி நகா், பூசாரிக்காட்டைச் சோ்ந்தவா் சௌண்டப்பன் மனைவி லட்சுமி (75). எடப்பாடி சாலையில் உள்ள நகராட்சிப் பூங்காவில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்துவரும் இவா், வியாழக்கிழமை மாலை குமாரபாளையம் - எடப்பாடி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராமல் லட்சுமி மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தில் வந்த எடப்பாடி, புள்ளாகவுண்டன்பட்டியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கதிா் (20), கோனேரிப்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் மணிகண்டன் (27) ஆகியோா் லேசான காயமடைந்தனா். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க