செய்திகள் :

குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகள்: தனியாா் வாகனம் பறிமுதல்

post image

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை, தனி நபா் ஒருவா் மதுரையிலுள்ள தனியாா் ஆலைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். மதுரையில் செயல்பட்டு வரும் அந்த ஆலையில், கோழிக் கழிவுகளை பயன்படுத்தி வீட்டு விலங்குகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் பகுதியில் சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சிக் கழிவுகளை, வழக்கத்துக்கு மாறாக திண்டுக்கல் முருகபவனம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிட்டங்கியில் கொட்டுவதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்றனா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகனத்தை சிறைப் பிடித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமையாளா் விநாயகம் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க