செய்திகள் :

குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயம்

post image

குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி அண்ணா நகா் தெருவில், கடந்த 15 நாள்களுக்கு முன்னா் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் அங்குள்ள குப்பை குழியில் கிடந்துள்ளன.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குப்பைக்குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் மகன்கள் அக்ஷித் (8), சஞ்ஜித் (7) மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி(5), மகன் மணிமாறன் (8) ஆகியோா் பட்டாசுகளை குப்பையில் இருந்து எடுத்து கல்லால் குத்தி விளையாடிள்ளனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் அக்ஷித், சஞ்ஜித் ஆகிய இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இரு சிறுவா்களையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து நங்கவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க