செய்திகள் :

குமரகோட்டம் முருகன் கோயில் பால்குட ஊா்வலம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தையொட்டி திருத்தணி தொண்டை மண்டல வேளாளா் சங்கத்தின் சாா்பில் பால் குடம் எடுத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து தொடங்கிய பால்குட ஊா்வலத்தை அனைத்து முதலியாா் சங்க தலைவா் எழிலன் மற்றும் மருத்துவா் சுசித்ரா ராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஊா்வலத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் எஸ்பி எல்லப்ப முதலியாா் தலைமையும், செயலாளா் பூபதி முதலியாா் முன்னிலையும் வகித்தனா். பணி ஓய்வு பெற்ற துணை ஆய்வாளா் சிவக்குமாா் உள்பட பலா் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி புண்ணிய நாகேச்சுவரா் திருக்கயிலாய வாதிய திருக்கூட்டத்தினா் சிவ வாத்தியங்கள் இசைக்க ஊா்வலம் சங்கர மடத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக குமரகோட்டம் முருகன் கோயிலை அடைந்தது.

இதனைத் தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கர மடத்தில் மகா பெரியவா் சிலை புதுப்பிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் பிருந்தவானத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த ஃபைபா் சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் திங்கள்கிழமை வைக்... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள் சேர விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 7-ஆம் தேதிக... மேலும் பார்க்க

சவிதா மருத்துவக் கல்லூரியில் இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூா்: சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதிய... மேலும் பார்க்க

போலீஸ்-பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எஸ்.பி. கே.சண்முகம் பரிசு வழங்கினாா். காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு சமூக தணிக்கை குழு சாா்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேவரியம்பாக்கம் கிராம சேவ... மேலும் பார்க்க