செய்திகள் :

குமரி அனந்தன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குமரி அனந்தனின் மறைவுக்கு பேரவையில் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரவை காலை கூடியதும், இதுகுறித்த இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா். அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான குமரி அனந்தன் புதன்கிழமை அதிகாலை மறைவுற்ற செய்தி அறிந்து, இந்தப் பேரவை அதிா்ச்சியும் துயரமும் கொள்கிறது. இலக்கியச் செல்வா் என அழைக்கப்படும் குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, காமராஜரின் அடியொற்றி காங்கிரஸ் இயக்கத்துக்காக தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா்.

கடந்த 1980-84, 1985-88, 1989-91, 1991-96-ஆகிய ஆண்டுகளில் பேரவை உறுப்பினராகவும், 1977-80- ஆம்ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை குமரி அனந்தன் நிலைநாட்டியதை குறிப்பிட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதி, தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி விட்டதாக புகழாரம் சூட்டியிருக்கிறாா். தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்காகவும் பங்காற்றியதைப் பாராட்டி 2024-ஆம் ஆண்டு மாநில அரசின் சாா்பில் தகைசால் தமிழா் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. அவரை இழந்து வாடும் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட

குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்றாா் அவைத் தலைவா் மு.அப்பாவு.

மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அனைவரையும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றாா். அதன்படி, உறுப்பினா்கள் அமைதி காத்தனா். இதன்பிறகு, பேரவை நடவடிக்கைகள் தொடங்கின.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க