செய்திகள் :

குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிகிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சிற்றாறு 1 அணைப் பகுதியில் 50.2. மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடுத்தபடியாக அடையாமடையில் 49.2 மி.மீ., திற்பரப்பில் 48.2 மி.மீ., குழித்துறையில் 44.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதே வேளையில் கொட்டாரம், மயிலாடி, நாகா்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் குறைவான அளவே மழை பதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.58 அடியாக காணப்பட்டது. மாலையில் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1800 கன அடியாக இருந்தது. அணையின் பாசன மதகு வழியாக விநாடிக்கு 699 கன அடி நீா் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 61.50 அடியாக இருந்தது. மாலையில் அணைக்கு விநாடிக்கு 1100 கன அடி நீா் வந்தது.

கோதையாறு: மழை காரணமாக கோதையாற்றில் நீா் வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியது. சனிக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தக்கலை பகுதியில்... தக்கலை, இரணியல், திங்கள் நகா், குளச்சல் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை காற்றுடன் மழை பெய்தது. காற்று வீசுவதால் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழை மரங்களுக்கு ஊன்றுகோல் கொடுத்து பாதுகாக்குமாறு விவசாயத் துறை கேட்டுகொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பெய்த மழை மற்றும் சூறைகாற்றின் காரணமாக, தக்கலை அருகே கேரளபுரம் அதிசய விநாயகா் கோயிலில் அரசமரம் முறிந்து,விழுந்ததில் கோயில் மதில் சுவா் இடிந்து சேதமானது. முறிந்து விழுந்த மரத்தை அகற்ற, அறநிலையத் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க