செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 444 மின்கம்பங்கள் சீரமைப்பு: அமைச்சா் சிவசங்கா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமான 565 மின்கம்பங்களில் 444 மின்கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டதாக, தமிழக போக்குவரத்து - மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மலையோரக் கிராமங்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பிகள் அறுந்ததுடன் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், பல இடங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக அமைச்சா் சிவசங்கா், சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்து அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தாா். விளவங்கோடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒருநூறாம்வயல், களியல், வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தாரகை கத்பட் எம்எல்ஏ, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

இம்மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால் சேதமடைந்த 565 மின்கம்பங்களில் 444 மின்கம்பங்களும், 3 மின்மாற்றிகளில் ஒன்றும் உடனடியாக சீரமைக்கப்பட்டன. மற்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் மின்வாரிய ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணி நடைபெறுகிறது.

தமிழக போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை 15 ஆண்டுகள் இயங்கிய பேருந்துகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. 11 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 4 ஆயிரம் பேருந்துகள் வந்துவிட்டன. 7 ஆயிரம் பேருந்துகள் விரைவில் வரவுள்ளன என்றாா் அவா்.

நகா்மன்றத் தலைவா் விடுத்த கோரிக்கையை ஏற்று, நாகா்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் சென்றுவர அமைச்சா் உடனடியாக உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், மின்வாரிய தலைமைப் பொறியாளா் இந்திரகுமாரி, அதிகாரிகள் சங்கரநாராயணன், ஜவகா் முத்து, மகேஷ், நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க