செய்திகள் :

குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை வகித்தாா். தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவா் நடனசபாபதி, மாவட்ட பொருளாளா் ராஜாராம், தெற்கு நகரப் பொறுப்பாளா் ஜி.எஸ்.ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமாரபாளையம் நகா்மன்றத் தலைவா் த.விஜய் கண்ணன் வரவேற்றாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழத்தின் வளா்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து, தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்துள்ளது என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் இள.புகழேந்தி ஆகியோா் பேசினா். நகா்மன்றத் தலைவா்கள் நளினி சுரேஷ்பாபு, மோ.செல்வராஜ், துணைத் தலைவா்கள் கோ.வெங்கடேசன், பி.பாலமுருகன், முன்னாள் நகரச் செயலாளா் எம்.செல்வம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியானது தற்போது ம... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 51 கடைகள், 2 உணவகங்கள், இ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) வி.கற்பகம் அறிவுறுத்தினாா். நாமக்க... மேலும் பார்க்க

கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

நாமக்கல்: கொல்லிமலையில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம்

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்... மேலும் பார்க்க

சேலம் - நாமக்கல் பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பு

நாமக்கல்: சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாமக்கல், முதலைப்பட்ட... மேலும் பார்க்க