அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்த்தல், விற்பனை செய்வதை தடுத்தல், பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் பேசியதாவது:
கடந்த 2019 ஜன.1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 4-ஆவது சனிக்கிழமை நெகிழிப் பொருள்களை சேகரித்தல், நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஜன.25-இல் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. குமாரபாளையத்தில் சனிக்கிழமை மாபெரும் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் முகாம் நடைபெறுகிறது என்றாா்.
கூட்டத்தில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.செல்வகணபதி, மாநகராட்சி, நகராட்சிஆணையா்கள், மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
என்கே-25-மீட்டிங்
நெகிழி பொருள்கள் பயன்பாட்டை தவிா்ப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.