செய்திகள் :

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்க, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.30,000 திருடு போயிருந்தது. இது தொடர்பாகக் கும்பகோணம் கிழக்கு போலீஸில் சார்லஸ் புகார் அளித்தார்.

கொத்தனார் வேலை செய்து கொண்டே திருட்டில் ஈடுப்பட்டவர்

இந்த நிலையில், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பூட்டிய வீடுகளில் பணம், நகை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. யார் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்கிற எந்த தடயமும் போலீஸுக்கு கிடைக்கவில்லை. அதனால், கொள்ளை கும்பலைப் பிடிக்க வேண்டிய நெருக்கடிக்கு போலீஸ் ஆளாகினர்.

இதையடுத்து, கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன், தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சார்லஸ் வீடு உள்ளிட்ட கும்பகோணம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது பந்தநல்லுார் அருகே சாயினாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (25) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கைது செய்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தனிப்படை போலீஸ் டீமில் பேசினோம். "ஆசைமணி கொத்தனார் வேலை செய்பவர். வேலைக்குச் செல்லும் பகுதிகளில் ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார். பின்னர் பகலில் கொத்தனார் வேலையை முடித்து விட்டு இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து திருட்டை அரங்கேற்றுவார். நகை, பணம் எது கையில் கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு வெளியேறி விடுவார். திருட்டில் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி கொடுத்து விட்டு மீதியை நண்பர்களுடன் சேர்ந்து மது பார்ட்டி வைத்து ஜாலியாக பொழுதைக் கழிப்பார். இது தான் ஆசைமணியின் லைப் ஸ்டைலாக இருந்துள்ளது.

போலீஸ் கைது செய்த திருடன் ஆசைமணி

கையில் இருக்கும் பணம் கரைந்த பின்னர் அடுத்த வீட்டுக்குள் புகுந்து விடுவார். கொள்ளையடித்த போது நிறையத் தலைமுடி, தாடியென்று இருப்பார். போலீஸ் தன்னை நெருங்குகிறார்கள் என்பது தெரிந்ததும் சிக்காமல் இருக்கத் தலைமுடி, தாடியைக் குறைத்து விட்டார். இரண்டு வாரம் கழித்து க்ளீன் சேவ் செய்து கொண்டு மொட்டை அடித்த மாதிரி முடியை வெட்டி விட்டார். கெட்டப் சேஞ்ச் செய்து தப்பித்து வந்தார். செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு இல்லாததால் அவரைப் பிடிப்பது சவாலாக இருந்தது. இந்நிலையில் பொறி வைத்த அவரைப் பிடித்தோம். ஆசைமணி மீது கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது" என்று தெரிவித்தனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க