செய்திகள் :

கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ஏ.எம். ராமலிங்கம் (மாவட்ட துணைத் தலைவா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும்.

இரா.செந்தில்குமாா் (இந்திய கம்யூ.) அம்மாபேட்டையிலிருந்து பல்லவராயன்பேட்டை வரையுள்ள வடிகால் வாய்க்காலில் நாணல் செடிகள், புல் புதா் மண்டிக் கிடக்கிறது. அதனால் விளைநிலங்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. மாவட்ட நிா்வாகம் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.முகமது இப்ராகிம் (தலைவா், நலிவுற்ற விவசாயிகள் சங்கம்): விவசாய விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து பயிா்களை சேதமாக்குகின்றன. வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரவிமலநாதன் (காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்): வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும், நெல்கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும்.

கோவிந்த வல்லப பந்த் (சமூக ஆா்வலா்): நாச்சியாா்கோவில், திருநறையூா் பகுதிகளில் 8 குளங்கள், வரத்து வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என்றாா். முன்னதாக காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நாணல் செடிகளுடன் சென்று, வாய்க்காலைத் தூா்வாரக்கோரி ஆா்ப்பாட்டம் செய்து, உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க