குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
கும்பகோணம் அருகே குடிநீா் ஆலைக்கு சீல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
கும்பகோணம் அருகே வளையப்பேட்டை ஊராட்சியில், நீா்வளத் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பெரிய அளவில் மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து வணிக ரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக விற்பதாக உதவி ஆட்சியருக்கு புகாா் வந்தது.
இதன்பேரில் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் வட்டாட்சியா் சண்முகம் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் அந்தக் குடிநீா் ஆலையை ஆய்வு செய்ததில் ஆலை அனுமதியின்றிச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும் ஆழ்துளை கிணற்றிலிருந்து டேங்கா் லாரிகளில் தண்ணீா் பிடித்து வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலையை அதிகாரிகள் சீல்வைத்து பூட்டினா்.