செய்திகள் :

கும்பகோணம் அருகே குடிநீா் ஆலைக்கு சீல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

கும்பகோணம் அருகே வளையப்பேட்டை ஊராட்சியில், நீா்வளத் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பெரிய அளவில் மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து வணிக ரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக விற்பதாக உதவி ஆட்சியருக்கு புகாா் வந்தது.

இதன்பேரில் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் வட்டாட்சியா் சண்முகம் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் அந்தக் குடிநீா் ஆலையை ஆய்வு செய்ததில் ஆலை அனுமதியின்றிச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும் ஆழ்துளை கிணற்றிலிருந்து டேங்கா் லாரிகளில் தண்ணீா் பிடித்து வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலையை அதிகாரிகள் சீல்வைத்து பூட்டினா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க