செய்திகள் :

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

post image

நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனா்; 18 குழந்தைகள் காயமடைந்தனா். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆண்டுதோறும் இந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோா் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்கள் முன் தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து அகல் விளக்கு, மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா்.

மதுரையில் ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

The 21st anniversary of the tragic Kumbakonam school fire that killed 94 children was observed on Wednesday.

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.போா்ச் சூழல் மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்பின் புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கம் விலை தொடா்ந்து... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே 8-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வன்னிப்போ் கிராமத்தில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மூத்ததேவி, விஷ்ணு சிற்பங்கள் மற்றும் 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.திண்டிவனம் அருகே மரக்க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,880 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழம வினாடிக்கு 17,235 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,880 கன அடியாக அதிகரித்துள்ளது.... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தெற்... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென... மேலும் பார்க்க

திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்: ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், போலி... மேலும் பார்க்க