செய்திகள் :

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

post image

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை வரை நடைபெறவுள்ளன.

இப்பணிகள் நடைபெறும் நாள்களில் அதிகாலை 5 முதல் மாலை 4.30 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

இருப்பினும் பயணிகளின் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க