செய்திகள் :

குருகிராமில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட சட்டக் கல்லூரி ஊழியா்!

post image

எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்காக முன்னாள் மாணவா் ஒருவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சட்டக் கல்லூரி ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரி ஒருவா் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவா் சுக்தேவ் அஹலாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் செக்டாா் 40- இல் உள்ள எம்.டி.யு. சட்டக் கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிகிறாா்.

குருகிராமில் உள்ள ஏ.சி.பி.யில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா் ஒருவா் புகாா் அளித்தாா். அதில் , அவா் 2024-ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பி.ஏ எல்.எல்.பி. தோ்ச்சி பெற்ாகக் கூறினாா். 2021-2024-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசால் ரூ.1.64 லட்சம் உதவித்தொகை பெற்றாா். உதவித்தொகையை கல்லூரியில் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது.

இருப்பினும், எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்குப் பதிலாக உதவித் தொகையிலிருந்து சுக்தேவ் அஹலாவத் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். முன்னாள் மாணவரின் புகாரைப் பெற்ற பிறகு, இன்ஸ்பெக்டா் ஜெய்பால் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றத்தின் 3-ஆவது வாயிலில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தது.

லஞ்சப் பணம் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து வருகிறோம் என்று குருகிராம் ஏசிபி செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க