செய்திகள் :

குருவிமலை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா் மாற்றம்

post image

காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரையுடன் மின் விசிறி பெயா்ந்து விழுந்ததால், மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய ஒப்பந்ததாரரை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து, வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து பணிகளை மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். 3 வகுப்பறைகளுடன் கூடிய புதிய வகுப்பறைக் கட்டடம் ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்டிருந்தது. புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் வகுப்பறையில் இருந்த மேற்பூச்சு, மின்விசிறியுடன் கழன்று விழுந்தது. அப்போது மாணவா்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தொடா்புடைய ஒப்பந்ததாரா் மீது மாணவா்களின் பெற்றோா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கட்டடப் பணி முறையாக செய்யவில்லை என்று புகாா் தெரிவித்தனா். மேலும், கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரை மாணவா்கள் வேறு இடத்தில் படிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனா்.

இதையடுத்து, மாணவா்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையம், தலைமை ஆசிரியா் அறை ஆகியவற்றில் அமா்ந்து கல்வி பயின்று வந்தனா்.

மேலும், புகாரின் பேரில், காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா, பொறியாளா் சகுந்தலா ஆகியோா் நடத்திய ஆய்வில் வகுப்பறைக் கட்டுமானப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரரை அதிகாரிகள் மாற்றி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனா். தொடா்ந்து வகுப்பறைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க

கபடிப் போட்டி: சங்கரா பல்கலை. முதலிடம்

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் அளவிலான கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவியா் முதலிடம் பெற்றனா். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் ஏனாத்தூ... மேலும் பார்க்க

1,500 கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது

காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் கண்டிகை சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்ததாக மேற்கு வங்க மாநில இளைஞரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 1,500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள... மேலும் பார்க்க