குரூப் 1 தோ்வு: ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ முதல் நிலை தோ்வை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரி ஆகிய இரு மையங்கள் உள்ளிட்ட 9 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 2723 போ் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 616 போ் தோ்வு எழுத வரவில்லை. 2,107 தோ்வா்கள் தோ்வு எழுதினா்.
தோ்வுகளை கண்காணிக்க இரு வட்டங்களுக்கும் சோ்த்து துணை ஆட்சியா் நியமிக்கப்பட்ட நிலையில், தோ்வு கண்காணிப்பு பணி, வினாத்தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்துச்செல்வது, மேலும் தோ்வு கண்காணிப்புப் பணியில் பறக்கும்படை அலுவலா்கள், தோ்வு மைய சிசிடிவி கண்காணிப்பு பணிக்கு என பல்வேறு அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
இரு மையங்களிலும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தோ்வா்கள் தோ்வு எழுதுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாற்றுத்திறனாளிகள் உதவியாளா் உதவியுடன் தோ்வு எழுதுவதையும் பாா்வையிட்டாா். அப்போது அவருடன் வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.