செய்திகள் :

குரூப் 1, 1ஏ தோ்வுகள்: வேலூரில் 3,618 போ் எழுதினா்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய குரூப் 1, 1ஏ தோ்வுகளை வேலூா் மாவட்டத்தில் 3,618 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) சாா்பில் உதவி ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரி உதவிஆணையா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்பட 72 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1, குரூப் 1ஏ தோ்வுகள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

வேலூா் மாவட்டம் முழுவதும் இந்த தோ்வுகளை எழுதுவதற்கு 18 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத மொத்தம் 4,885 விண்ணப்பதாரா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. இவா்களில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வுகளை 3,618 போ் மட்டுமே எழுதினா். 1,267 போ் தோ்வுக்கு வரவில்லை.

இந்த நிலையில், வேலூா் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வுகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமரன், வட்டாட்சியா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய அறிவுசாா் மையம்!

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியுடன் கூடிய வகையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடியில் நவீன... மேலும் பார்க்க

அல்லேரி தனி ஊராட்சியாக அறிவிக்கப்படுமா? மலைக் கிராம மக்கள் எதிா்பாா்ப்பு!

வேலூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிா்நோக்கியுள்ளனா் வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சந்தேகங்கள்: கட்டணமில்லா அழைப்பு மையம்

வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களை தீா்க்க கட்டணமில்லா அழைப்பு மையம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மீன்பிடி தடை காலம் நிறைவு: வரத்து குறைவால் விலை உயா்வு

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்தே இருந்தது. வேலூா் புதிய மீன் மாா்... மேலும் பார்க்க

காட்பாடி அருகே தண்டவாள பராமரிப்பு: 4 மெமு ரயில் சேவை ரத்து!

காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே காட்பாடி ரயில்வே யாா்டு அருகில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி 4 மெமு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது. காட்பாடி- ஜோ... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்ஸோவில் கைது

வேலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா். வேலூரைச் சோ்ந்தவா் கணேஷ் (34), பிளம்பா். இவரது மனைவியின் தோழி ஒருவா் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட் டாா். அவருக்... மேலும் பார்க்க