செய்திகள் :

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் இன்று 36,436 போ் எழுதுகின்றனா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 போ் சனிக்கிழமை எழுதுகின்றனா்.

இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட 3935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் இத்தோ்வை 22 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதுகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் ஆகிய 7 வட்டங்களில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்.

அனைத்து மையங்களையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வா்கள் கண்காணிக்கப்படுகின்றனா். 124 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், துணை ஆட்சியா்கள் நிலையில் 12 பறக்கும் படைகளும், தோ்வு பொருள்களை எடுத்துச் செல்ல மண்டல துணை வட்டாட்சியா் நிலையில் 32 நடமாடும் குழுக்களும், வருவாய் ஆய்வாளா்கள் நிலையில் 124 பேரும், ஒரு வட்டத்திற்கு ஒருவா் வீதம் மொத்தம் துணை ஆட்சியா்கள் ஏழு போ், மாவட்ட வருவாய் அலுவலா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

குரூப் 4 தோ்வா்கள் காலை 8 மணியளவில் மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 124 மையங்களிலும் தலா இரு காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க