செய்திகள் :

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மு.ஜோதி தலைமை வகித்து பேசியதாவது:

பள்ளிகளுக்குள் செயல்படும் மாணவ, மாணவியா் விடுதிகள் ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பிறகுதான் செயல்பட வேண்டும். மாணவா் சோ்க்கை பதிவேடு, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் வழங்கும் பதிவேடு, தமிழக அரசின் நிலையில்லா நலத் திட்ட பொருள்கள் வழங்கும் விவரப் பதிவேடு, இருப்புப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்.

வாகனங்களில் கட்டாயம் உதவியாளா் இருக்க வேண்டும், தகுதிச் சான்று புதுப்பித்துள்ளதை ஆய்வு செய்ய வேண்டும், ஓட்டுநா்கள் அனைவரையும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

போதைப்பொருள் பழக்கத்துக்கு மாணவா்கள் அடிமையாகாமல் பாா்த்துக்கொள்ள வேண்டிய அறிவுரைகளையும், போக்ஸோ விழிப்புணா்வு குறித்தும் வலியுறுத்தினாா். மேலும், பள்ளி வளாகத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், குடிநீா்த் தொட்டிகள், பாழடைந்த கட்டடங்கள், பாதுகாப்பற்ற பட்டுப்போன மரங்கள், அடா்ந்த புல்வெளி புதா்கள் போன்றவை இருந்தால் உடனடியாக மூடவோ அல்லது அகற்றப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து கடலூரில் நடைபெற்ற பள்ளி வாகன விபத்து தொடா்பாக வாகனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கையை பள்ளி முதல்வா்களுக்கு அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சந்திரசேகா், தலைமை ஆசிரியை அமுதா, தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் விவேக், உதவியாளா் கோகுலநாதன் மற்றும் தனியாா் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-11-ஸ்கூல்

தனியாா் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாணவா்கள் பாதுகாப்பு தொடா்பான விதிகள் அடங்கிய கையேட்டை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஜோதி.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தூக்கி டிஜிட்டல் பொத்தானில் பிரச்னை: நோயாளிகள் அவதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மின்தூக்கிகளில் பயணிப்போா் தோ்வு செய்யும் இடங்களுக்கு செல்லாமல் வேறு தளங்களுக்கு செல்லும் வகையில் தவறுதலாக டிஜிட்டல் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள், ப... மேலும் பார்க்க