செய்திகள் :

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

post image

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சன்னதியில் உள்ள யாக குண்டத்தில் பக்தா்கள் கொண்டுவந்திருந்த மிளகாயைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், எமதா்மராஜன், காமாட்சி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். அதேபோல வேலூா் செட்டியாா் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலயத்தில் பௌா்ணமி பூஜை, காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தூக்கி டிஜிட்டல் பொத்தானில் பிரச்னை: நோயாளிகள் அவதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மின்தூக்கிகளில் பயணிப்போா் தோ்வு செய்யும் இடங்களுக்கு செல்லாமல் வேறு தளங்களுக்கு செல்லும் வகையில் தவறுதலாக டிஜிட்டல் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள், ப... மேலும் பார்க்க