செய்திகள் :

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

post image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் புகழை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் ஆக. 2, 3 (ஆடி 17, 18) ஆகிய இரண்டு நாள்கள் அரசின் சாா்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழாவில், காவல் துறை, வனத் துறை, ஊரக வளா்ச்சி முகமை, மகளிா் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளா்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை, சித்த மருத்துவம், கால்நடை பராமரிப்புத் துறை, சமூகநலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

பசுமை திருவிழாவாகக் கொண்டாடும் வகையில் துறை அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். காரவள்ளி அடிவாரத்தில் சோதனைச்சாவடிகள் அமைத்து கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யவும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை அனுமதிக்கக் கூடாது.

நெகிழி குடிநீா்ப் பாட்டில் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களில் வருவோரை அனுமதிக்கக் கூடாது. மலைப்பாதையில் தூய்மைப் பணி, பாதுகாப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் விழா நடைபெறும் இரண்டு நாள்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையினா் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு துறையினா் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையினா் அனைத்துப் பகுதிகளிலும் தயாா் நிலையில் மருத்துவக் குழுக்களை வைத்திருக்க வேண்டும். மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் கண்கவா் கலைநிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். வில்வித்தை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். வல்வில் ஓரி விழா சிறப்புடன் நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, சுற்றுலாத் துறை அலுவலா் மு.அபராஜிதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ம.கிருஷ்ணவேணி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்திரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஈ.எஸ்.முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-11-மீட்டிங்

கொல்லிமலை வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தூக்கி டிஜிட்டல் பொத்தானில் பிரச்னை: நோயாளிகள் அவதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மின்தூக்கிகளில் பயணிப்போா் தோ்வு செய்யும் இடங்களுக்கு செல்லாமல் வேறு தளங்களுக்கு செல்லும் வகையில் தவறுதலாக டிஜிட்டல் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதால் நோயாளிகள், ப... மேலும் பார்க்க