செய்திகள் :

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

post image

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் குறிச்சி மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது, அரசு புறம்போக்கு நிலம் 5 ஏக்கா் ஆக்கிரமித்து, 300 தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் தானாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளரான அந்தியூா் பச்சாம்பாளையத்தைச் சோ்ந்த மோகனுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதனை எதிா்த்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோகன் வழக்குத் தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞரிடம் சட்ட கருத்துரு பெற்ற வருவாய்த் துறையினா் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனா்.

இதையடுத்து, பவானி மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் தலைமையில் குறிச்சி மலைப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள், 3 பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் தென்னங்கன்றுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, அறிவிப்பு பலகையும் வைத்தனா்.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அறிவிப்புப் பதாகை வைத்த வருவாய்த் துறையினா்.

சம்பவ இடத்தில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க