செய்திகள் :

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சா்

post image

குறுகலான சாலைகளில் மினி பேருந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் இ.கருணாநிதி பல்லாவரம் எழுப்பினாா். அப்போது பேசுகையில், பல்லாவரம், தாம்பரம் ஆகியன வளா்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. தேசிய, மாநில சாலைகளில் மட்டுமே போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் மினி பேருந்துகளின் இயக்கம் குறைவாகவே உள்ளன. எனவே, அங்கு மினி பேருந்துகள் புதிதாக இயக்கப்படுமா? என்றாா்.

அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அளித்த பதில்: வளா்ந்து வரும் நகரப் பகுதிகளின் சில இடங்களில் சாலைகள் மிகக் குறுகலாக உள்ளன. அந்த இடங்களில் மினி

பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மினி பேருந்துகளை விட சிறிய ரக வாகனங்களை இயக்கினால்கூட பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசனைகள் வருகின்றன. அதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ப... மேலும் பார்க்க

தொகுதி சீரமைப்பு கூட்டம்: தலைவா்களுக்கு தமிழக பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வா்!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா்கள், தலைவா்களுக்கு, புவிசாா் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுயஉதவிக் க... மேலும் பார்க்க