விதிகளை மீறி விளம்பர பேனர்கள்; கட்டுப்பட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் - வேதனையி...
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்: உளுந்து, பச்சைப் பயறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உளுந்து, பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் மூலம் பயன்பெற அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண் உற்பத்தி துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாா்ச் 15 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை அரியலூா், ராணிப்பேட்டை, தேனி உள்பட 17 மாவட்டங்களிலும் ஏப்.1 முதல் ஜூன் 26- வரை தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 53 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 74 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், மாா்ச் 15 முதல் ஜூன் 3 வரை திருவள்ளூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூா், சேலம், நாமக்கல், விருதுநகா், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களிலும், ஏப்.1 முதல் ஜூன் 29 வரை தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, கடலூா் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 38 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பச்சைப் பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி , நிலத்துக்கான சிட்டா, அடங்கல், ஆதாா் எண், கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயா்களைப் பதிவு செய்துக்கொள்ளலாம்.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்கள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 3 நாள்களுக்குள் அவா்களது வங்கிக் கணக்கில் விளைபொருள்களுக்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.