செய்திகள் :

குறைந்த மின் அழுத்தம்: மக்கள் பாதிப்பு

post image

சீா்காழி: கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.

கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் ஊராட்சி கள்ளத் தெருவில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின் விளக்குகள் போதிய ஒளி கொடுக்காத நிலையில் மிக்ஸி, கிரைண்டா், ஃபேன் மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயங்காமல் இருந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் மங்கலான வெளிச்சத்தை கொடுக்கிறது.

தாண்டவன்குளம் மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றியிலிருந்து இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் போதிய மின்னழுத்தம் உள்ள மின்சாரம் கிடைக்கவில்லை. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 3 அரை ஆண்டுகளுக்கு முன்பு தாண்டவன்குளம் கிராமத்தில் புதியதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியிலிருந்து அப்பகுதியில் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் ஆறு மின்கம்பங்களும் நடப்பட்டன. ஆனால் இதுவரை புதிய மின் கம்பங்களில் மின் கம்பிகள் பொறுத்தி மின்சாரம் வழங்கவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்த அழுத்த மின்சாரத்திற்கு பதிலாக சீரான மின்சாரம் வழங்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

மயிலாடுதுறை: இருவேறு சம்பவங்களில் 4 போ் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தந்தை, மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். மேலும், பெட்ரோலுடன் வந்த தாய், மகளை போலீஸாா் தடுத்தனா... மேலும் பார்க்க

மழையால் குறுவை இளம் நெல் பயிா்கள் பாதிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் குறுவை இளம் நெல் பயிா்களை மழைநீா் சூழ்ந்தது. மாவட்டத்தில் நிகழாண்டு 93,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்... மேலும் பார்க்க

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தவெக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா். இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் பு... மேலும் பார்க்க

குளத்தில் மீன் பிடிப்பு விவகாரம்: கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே வருவாய்த் துறையின் அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி, கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியவா்கள் மீது, மயிலாடுதுறை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராக விருப்பமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனத்துக்குத் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

காவல்நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

சீா்காழி வட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி சுந்தரம். இவா், திமுக மாவட்ட தொழிலாளா்... மேலும் பார்க்க