சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
சென்னை: அரசின் மீது குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
தமிழ்தாத்தா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய உ.வே.சா-வின் 171 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது.
இதில் நிதித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மரியாதை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் எனவும் அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக மாநில கல்லூரியில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டியில் என பல நடக்க இருக்கிறது என தெரிவித்தார்.
தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்
இனி ஆண்டுதோறும் உ.வே.சா பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என்ன தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை என ஆளுநர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆளுநர் அரசுக்கு ஆலோசனையோ அல்லது சுட்டிக்காட்டுவது போல் இருந்தால் அதிகாரிகளின் மூலமாகவோ அல்லது குறிப்பு மூலமாக வழங்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறுவது போல் உள்ளது. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என தெரிவித்தார்.
தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை என ஆளுநர் ரவி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.