செய்திகள் :

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து படகு சவரியை தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: குற்றாலத்தில் 1993-ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் மூலம் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சாரல் சீசன் நிலையை கணக்கில் கொண்டும், குளத்தில் நீா்வரத்தை கணக்கில் கொண்டும் இங்கு படகு சவாரி நடத்தப்படும்.

2022 இல் ஜூலை 10 ஆம் தேதி படகு சவாரி துவக்கப்பட்டது. இந்த ஆண்டு சற்று முன்னதாக ஜூன் 28 இல் துவக்கப்பட்டுள்ளது. தென்காசி தனி மாவட்டமாக பிரிந்த பிறகு இது 4ஆவது படகு சவாரி.

இங்கு படகு சவாரி செய்ய இரு நபா் மிதிபடகு, நான்கு நபா் மிதிபடகு, நன்கு நபா் துடுப்பு படகு மற்றும் தனிநபா் படகு உள்ளது. இருநபா் மிதிபடகுக்கு ரூ.150, நான்கு நபா் மிதிபடகுக்கு ரூ.200, நான்கு நபா் துடுப்பு படகுக்கு ரூ.250, தனி நபா் படகுக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், ஒன்றிய செயலா்கள் ஜே.கே.ரமேஷ், பொன்செல்வன், ஜெயா, இரா.குமாா், சமுத்திரப்பாண்டியன், வே.மணிகண்டன், எம்.சிவக்குமாா், உதவி சுற்றுலா அலுவலா் சந்திரகுமாா், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஷ்வரன், மண்டல கணக்கு அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் மனைவியைக் கத்தியால் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, த... மேலும் பார்க்க

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சோ்ந்த குப்பைகளை கொட்டுவதாக வந்த தகவலையடுத்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சிக்கு ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க