மன உளைச்சலில் இருந்தால் என்ன செய்வது? த்ரிஷா பகிர்ந்த ரீல்ஸ்!
குற்றியாறு ரப்பா் தோட்ட தொழிலாளா் குடியிருப்பில் புகுந்த யானைகள்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்ததால் அப் பகுதியினா் அச்சம் அடைந்துள்ளனா்.
பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினா் குடியிருப்பு, ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பயிா்கள் மற்றும் வீடுகளைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பால் வடிப்பில் உள்ள தொழிலாளா்களைத் தாக்கி அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளா்களான சபரிமுத்து வீட்டின் கதவை செவ்வாய்க்கிழமை இரவு யானை தட்டி திறந்துள்ளது. அவரது கூச்சல் கேட்டு வந்த பக்கத்து வீட்டினா் ஓடி வந்து, ஓசை எழுப்பி யானையை விரட்டினா்.
பின்னா் காலையில் பாா்த்தபோது அப்பகுதியில் நடவு செய்திருந்த ரப்பா் செடிகளை யானைகள் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் காரணமாக ரப்பா் கழக தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா். தங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.