செய்திகள் :

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவா் நாராயணன்

post image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவா் நாராயணன் பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. அங்கு மேலும் இரண்டு ஏவுதளங்கள் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளாா். ஸ்ரீஹரிகோட்டா, குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்.

சந்திரயான் 4 திட்டம், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு கொண்டு வரும் திட்டம். வரும் 2028இல் அது நடைபெறும். அதற்கான அனைத்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

1975 ஆம் ஆண்டு மற்ற நாட்டின் உதவியுடன் முதல் செயற்கைக்கோளை இந்தியா அனுப்பியது. ஆனால் தற்போது 433 செயற்கைக் கோள்கள் பிற நாடுகளுக்காக இந்திய மண்ணில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்தியா வளா்ச்சி அடைந்த நாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க