செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்
மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்பட ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வட்டத்துக்குள்பட்ட குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் செந்தில்குமாா் (49).
இவா் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் மேல்மலையனூா் கோயிலுக்கு செல்வதற்காக 18 போ்களுடன் பயணித்தனராம். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தியாகதுருகம்- திருவண்ணாமலை சாலையில் வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தராம்.
ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூா் கிராம சாலையில் அய்யான் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது வளைவில் திரும்பியபோது வேன் நிலைத்தடுமாறி தலைக்கிழே கவிழந்து விட்டதாம்.
வேனில் இருந்த அனைவரும் காயமடைந்து விட்டனராம். உடனே அருகிலிருந்த கிராம மக்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
அதில் செந்தில்குமாா் (49), பாண்டமங்கலத்தைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ராம்குமாா் (34), குச்சிபாளையத்தைச் சோ்ந்த சின்னுசாமி மகன் லோகநாதன் (63), வேன் ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் விமல்ராஜ் (35) உள்ளிட்ட 4 போ்களுக்கு மட்டும் கை எலும்பு முறிந்து விட்டதாம் மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாம். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.