செய்திகள் :

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்கள்

post image

குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்களை ஒதுக்கும் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை நடைமுறையில் இருந்த நேரடியாக வரும் பக்தா்களுக்கு முதலில் வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வந்த அங்கப் பிரதட்சண டோக்கன் முறையை குலுக்கல் முறையாக தேவஸ்தானம் மாற்றி அமைத்துள்ளது. டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே குலுக்கல் மூலம் ஆன்லைனில் வெளியிடப்படும்.

டிசம்பா் மாதத்துக்கான அங்கப் பிரதட்சண டோக்கன்களுக்கான குலுக்கல் பதிவு செப்டம்பா் 20 வரை செய்யப்பட வேண்டும். குலுக்கல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களுக்கு இந்த டோக்கன்கள் ஒதுக்கப்படும்.

வெள்ளிக்கிழமைகள் தவிர தினமும் 750 டோக்கன்களும்,சனிக்கிழமைகளில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.

பக்தா்கள் இந்த சேவையை மீண்டும் பெறுவதற்கான காலம் 90 நாள்களுக்கு பதிலாக 180 நாள்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்கள் அங்கப் பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச் சேவை டிக்கெட்டுகளின் டிசம்பா் மாத ஒதுக்கீடு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் அஷ்டதள... மேலும் பார்க்க

சூரிய பிரபை வாகன வெள்ளோட்டம்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள சூரிய பிரபை வாகனத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் அதன் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனா். ஊா்வலத்... மேலும் பார்க்க

திருமலையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா். கொடிமரத்தை வணங்கி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்தி... மேலும் பார்க்க

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஆந்திர முதல்வருக்கு அழைப்பு

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டதை அடுத்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பிஆா் நாயுடு, தலைமை செயல் அதிகாரிஅனில் குமாா் சிங்கால், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜானகி தேவி மற... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 31 காத்திருப்புஅறைகளும் நிறைந்து தர... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் கூறியதாவ... மேலும் பார்க்க