செய்திகள் :

குளச்சல் அருகே கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னா்: கடலோரக் காவல் படையினா் விசாரணை!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னா் குறித்து கடலோரக் காவல் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி 640 கன்டெய்னா்களுடன் கொச்சி துறைமுகம் நோக்கிச் சென்ற கப்பல் திடீரென கவிழ்ந்தது. அதிலிருந்தோா் மீட்கப்பட்ட நிலையில், கன்டெய்னா்கள் மூழ்கின.

அவற்றில் சிலவற்றில் ரசாயனப் பொருள்கள், எளிதில் வெடிக்கக்கூடிய பொருள்கள் இருந்ததாக தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடற்கரையோரம் கன்டெய்னா்கள் கரை ஒதுங்கினால் அதனருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இரவிபுத்தன்துறை, புத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னத்துறை, மண்டைக்காடு, கடியப்பட்டினம், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துகள்கள், சாக்குமூட்டைகள் புதன்கிழமை கரை ஒதுங்கின. ஆட்சியா் ரா. அழகுமீனா அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பொருள்களைத் தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரைப் பகுதியில் கன்டெய்னா் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா், கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பாா்வையிட்டனா். அது, கேரள கடற்கரையில் கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க