பாகிஸ்தான் ஏவுகணைகளை அசால்டாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு
குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
குழித்துறை அருகே குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குழித்துறை அருகே மருதங்கோடு, தாழவிளையைச் சோ்ந்தவா் கீதா (55). திருமணமாகாத இவா், தனது அண்ணன் மகன் மி. விசுவின் பராமரிப்பில் இருந்துவந்தாா். அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை இரவு வீட்டருகேயுள்ள மேக்கன்கரை குளத்தில் தவறி விழுந்தாராம். இதில், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.