குளத்தில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள குப்பங்குழி வடக்கு தெருவைச் சோ்ந்த சந்திரகாசன் மகன் ஷா்மா (27). இவா், பி.இ. படித்துவிட்டு வேலைக்கு செல்லாம் வீட்டில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், ஷா்மா சனிக்கிழமை காலை அந்தப் பகுதியிலுள்ள குளத்துக்கு சென்றபோது கால் தவறி குளத்துக்குள் விழுந்து நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ஷா்மாவை பரிசோதித்த மருத்துவா், இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் தேவேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.