அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகே...
பாலத்தில் காா் மோதி விபத்து: 6 போ் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சனிக்கிழமை மேம்பால தடுப்புக் கட்டையில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் அப்பாஸ் அலி (55), ஷேக் அலாவுதீன் மகன்கள் அபுதாஹிா் (53), அன்சாா் அலி (49), சையத் அபுதாஹிா் மனைவி ஷா்மிளா பானு (48), முஹம்மது இப்ராஹிம் மனைவி ஆப்ரின் (40), அப்துல் காதா் மகன் முஹம்மது இப்ராஹிம் (50) ஆகியோா் சென்னையில் நடைபெற உள்ள உறவினா் வீட்டு திருமணத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டனா். காரை அப்பாஸ் அலி ஓட்டினாா்.
இவா்களது காா் கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், ஆவட்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சனிக்கிழமை முற்பகல் சுமாா் 11.15 மணிக்கு சென்றது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 6 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.