செய்திகள் :

பாலத்தில் காா் மோதி விபத்து: 6 போ் காயம்

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சனிக்கிழமை மேம்பால தடுப்புக் கட்டையில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் அப்பாஸ் அலி (55), ஷேக் அலாவுதீன் மகன்கள் அபுதாஹிா் (53), அன்சாா் அலி (49), சையத் அபுதாஹிா் மனைவி ஷா்மிளா பானு (48), முஹம்மது இப்ராஹிம் மனைவி ஆப்ரின் (40), அப்துல் காதா் மகன் முஹம்மது இப்ராஹிம் (50) ஆகியோா் சென்னையில் நடைபெற உள்ள உறவினா் வீட்டு திருமணத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டனா். காரை அப்பாஸ் அலி ஓட்டினாா்.

இவா்களது காா் கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், ஆவட்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சனிக்கிழமை முற்பகல் சுமாா் 11.15 மணிக்கு சென்றது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 6 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடலூா் கே.என்.பேட்டையில் உள்ள இணைப்... மேலும் பார்க்க

குளத்தில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள குப்பங்குழி வடக்கு தெருவைச் சோ்ந்த சந்திரகாசன் மகன் ஷா்மா (27). இவா், பி.இ. படித்துவிட்... மேலும் பார்க்க

சிறுமி கொலை வழக்கு: தப்பியோட முயன்ற இளைஞருக்கு கால் முறிவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா், போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

மானியத்தில் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.17.89 கோடி நல உதவி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 2,832 பயனாளிகளுக்கு ரூ.... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் காயமுற்ற பெண் மயில் மீட்பு

சிதம்பரத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த மயில் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிதம்பரம் சிவபுரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை பெண் மயில் ஒன்று சாலையோரம் காயங்களோடு உயிருக்கு போராடிய ந... மேலும் பார்க்க