Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! எ...
குழந்தைகளுக்கான விபத்து, காய சிகிச்சை மையம் தொடக்கம்
குழந்தைகளுக்கான பிரத்யேக விபத்து - காயம் மற்றும் எலும்பு சிகிச்சை மையத்தை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகள் விளையாடும்போதும், தவறிவிழும்போதும் நேரிடும் எலும்பு முறிவு, காயங்களுக்கென பிரத்யேக சிகிச்சை மையம் இதுவரை இல்லை. அதேபோன்று, பிறவியிலேயே ஏற்படும் எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கும் தனி மருத்துவ கட்டமைப்பு கிடையாது.
அதைக் கருத்தில் கொண்டு முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான பிரத்யேக விபத்து - காய சிகிச்சை, எலும்பு சிகிச்சை மையத்தை அப்பல்லோ தொடங்கியுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் அனில், குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஆா்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குழந்தைகளுக்கான அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மையமாக இது செயல்பட உள்ளது. மாதத்துக்கு 140 மருத்துவ சீரமைப்பு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு அங்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.