செய்திகள் :

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்த ஜிப்மா் மருத்துவமனை பிரசாரம்

post image

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கை நிறுத்தும் விழிப்புணா்வு பிரசாரம் ஜிப்மரில் நடத்தப்பட்டது.

இது குறித்து ஜிப்மா் குழந்தைகள் நலத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வயிற்றுப் போக்கை நிறுத்துவது தொடா்பான இரண்டு மாத கால பிரசாரம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் இயக்குநா் வீரசிங் நேகியின் வழிகாட்டுதலின் கீழ் ஜிப்மா் இந்த பிரசாரத்தை கவனமாக திட்டமிட்டுச் செயல்படுத்தியது. பிரசாரத்துக்கான பொறுப்புஅதிகாரி ரம்யா ஸ்ரீனிவாசரங்கன், செவிலியா் துறையின் பொறுப்பாளா் சாந்தி தமிழ்மணி, அவரது குழுவினா் மற்றும் குழந்தை மருத்துவத் துறைத் தலைவா் குணசேகரன் ஆகியோா் இந்த முயற்சியை வழிநடத்தினா்.

மேலும், ரங்கோலி போட்டி, கலைப்படைப்புகள், வயிற்றுப்போக்கு தடுப்பு குறித்த நாடகங்கள் நடத்தப்பட்டன. செவிலியா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த மூத்த நா்சிங் அதிகாரிகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் மேலாண்மை‘ என்ற கருப்பொருளில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் பிரசாரங்களில் பங்கேற்பாளா்கள் மற்றும் வெற்றியாளா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவ கண்காணிப்பாளா் துரைராஜன் 5 வயதுக்கு உள்பட்ட இறப்பு விகிதத்தை அடைவதற்கான இந்தியாவின் இலக்கில் வயிற்றுப்போக்கு தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

புதுவை அரசின் துணை இயக்குநா் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் மாநில அதிகாரி அனந்தலட்சுமி, பேசுகையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 1,16,368 குழந்தைகள் இருப்பதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் வயிற்றுப்போக்கால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை’ என்றாா்.

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்குத் தீா்வு

காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது.புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 51 புக... மேலும் பார்க்க

அதிக விலைக்கு விற்பனை: 4 மதுபான கடைகளுக்கு அபராதம்

புதுவையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ாக 4 மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.புதுச்சேரி எல்லைக்கு உள்பட்ட மதுபானக் கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட... மேலும் பார்க்க

முன்கூட்டியே முதல்வரின் பிறந்தநாள் ஏற்பாடுகள்

புதுவை சட்டமன்ற தோ்தல் இன்னும் 8 மாதத்தில் வரவிருப்பதால் இந்த ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது தொண்டா்கள் முன்கூட்டியே கொண்டாட தொடங்கி விட்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க

வீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம்

வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மின் துறை கேபிள்ஸ் பிரிவின் செயற்பொறியாளா் இரா. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க