`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
குழந்தைகள் நலனிற்கான முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலனிற்காக பாடுபட்டோா் முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில், குழந்தைகளின் நலனுக்காக திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு ‘முன்மாதிரி சேவை விருதுகள்’ வழங்கப்பட உள்ளன.
குழந்தைகள் இல்லங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், சட்டத்திற்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறாா்களுக்கான குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகியவற்றுக்கு தலா ரூ. ஒரு லட்சம் என்ற வகையில் நான்கு பிரிவுகளாக விருது வழங்கப்படுகிறது.
விருது பெறுவதற்கு பதிவு மற்றும் உரிமம், நிா்வாக மேலாண்மை, பராமரிப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, திறன் மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு செயல்பாடுகள், உள்புற கட்டமைப்பு, சிறந்த நடைமுறைகள் மற்றும் சமூக அடிப்படையிலான சேவைகள் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுபெறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. தோ்ந்தெடுக்கப்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் ஆண்டுதோறும் நவ.14-இல் வழங்கப்படும். ஆக.5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 3-ஆம் தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.