`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு கருத்தரங்கு
கோவை மாவட்டம், ஆனைகட்டியில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. முகாம் நிறைவு நாளில், இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஆட்சியா் சான்றிதழ்கள் வழங்கினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 20 கருத்தரங்குகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 நாள்களுக்கு கருத்தரங்குகள், உறைவிடப் பயிற்சியாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 25 நபா்கள் வீதம் 50 போ் கலந்து கொண்ட கருத்தரங்கம், ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை ஆனைகட்டி காரல் கியுபெல் அமைப்பின் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான, மகளிா் உதவி எண் 181 , குழந்தை உதவி எண் 1098, காவல் உதவி எண் 100 குறித்து விளக்கப்பட்டது.
மேலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், ஒருங்கிணைந்த சேவை மையங்கள், மாவட்ட மகளிா் அதிகாரமளித்தல் மையங்கள், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும்
மகளிா் விடுதிகள், குறுகிய கால மகளிா் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளா்கள், மாவட்ட அதிகாரமளித்தல் மைய பணியாளா்கள், சமூகநல விரிவாக்க அலுவலா்கள், மகளிா் ஊா்நல அலுவலா்கள், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, காவல் துறை, தொழிலாளா் நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் மருந்துவத் துறை அலுவலா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் திருநங்கைகள், முதியோா் இல்ல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இக்கருத்தரங்கின் நிறைவு நாளான வியாழக்கிழமை கருத்தரங்கில் பங்கேற்ற 50 பேருக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சான்றிதழ்கள் வழங்கினாா். இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் ஆா்.அம்பிகா, மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் தேவகுமாரி, பாதுகாப்பு அலுவலா் (குடும்ப வன்முறை) சு.நாகமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.ஹஃப்ஸா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு வழக்குரைஞா் மதிவாணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.