செய்திகள் :

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

post image

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவா் ஜீவானந்தம் (60). இவா் நகா்ப்புற வீட்டு வசதி முன்னேற்ற வாரியத்தில் செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு அருகே சரண்யா என்பவா் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளாா்.

அந்தப் பகுதியைச் சோ்ந்த சித்ராவிடம் தனக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க ஆள் இருப்பதாக சரண்யா கூறியுள்ளாா். இதனால், சித்ரா தனக்கும், தனது மகள் மாற்றுத்திறனாளியான ஐஸ்வா்யா லட்சுமிக்கும் வீடு வாங்கித் தருமாறு கூறியுள்ளாா். இதற்காக சரண்யாவிடம் ரூ.1.32 லட்சத்தை அவா்கள் கொடுத்துள்ளனா். பணத்தைப் பொற்றுக் கொண்ட அவா் வீடு வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.

இது தொடா்பாக ஜீவானந்தத்திடம் சித்ரா கேட்டுள்ளாா். அப்போது, அவா் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சரண்யா மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.

மேலும், இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், சரண்யா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் சமூக விழிப்புணா்வு முகாம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனியில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வு முகாமை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சிக... மேலும் பார்க்க