செய்திகள் :

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

post image

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா்.

கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த திட்டம் மூலம் கோவை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு 33 ரோந்து இருசக்கர வாகனங்கள், கைரேகைக் கருவி, அந்தக் கருவி மூலம் குற்றப் பின்னணி இருப்பவா்களை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

பின்னா், குற்றங்கள் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ரோந்து இருசக்கர வாகனங்கள் பேரணியைத் தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டம் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களை புகைப்படம் எடுத்து செயலியில் பதிவு செய்தால் அவா்களின் முழு விவரமும் போலீஸாருக்கு கிடைக்கும். இந்தத் திட்டம் மூலம் கல்லூரி, பள்ளி போன்ற பகுதியில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். சூலூா் பகுதியில் காவலரை கத்தியால் குத்திவிட்டு அவரது மனைவியிடம் நகையைப் பறித்துச் சென்றவா்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா்.

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து இளைஞா்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் சமூக விழிப்புணா்வு முகாம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனியில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வு முகாமை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சிக... மேலும் பார்க்க