செய்திகள் :

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்தாா்.

இதில், அபிராமி செவிலியா் கல்லூரி, ஹிந்துஸ்தான் செவிலியா் கல்லூரி மற்றும் ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி, சிசுவித்யோதயா பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு’ என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் தொடங்கி பேரணி ரேஸ்கோா்ஸ் சாலை வழியாக சென்று சிஎஸ்ஐ பள்ளியில் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, ருத்ராஞ்சநேயா சிலம்பம் கலைக் குழுவினரின் இளம் வயது திருமணம், இளம் வயது கா்ப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, செவிலியா்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றனா்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மு.கெளரி, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) சுமதி, மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஹப்ஸா, மாவட்ட விரிவாக்க கல்வியாளா்கள் த.ராணி, சாா்லஸ் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் சமூக விழிப்புணா்வு முகாம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனியில் நடைபெற்ற சமூக விழிப்புணா்வு முகாமை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சிக... மேலும் பார்க்க