செய்திகள் :

குழந்தை திருமணங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க, அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணமாகும். இத்தகைய திருமணங்களால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடைகுறைவாக, மனவளா்ச்சிக் குன்றிய குழந்தை பிறப்பது, தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-இன்படி, குழந்தை திருமணம் நடத்தியவா்கள், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவா்கள், குழந்தை திருமணங்களில் கலந்துகொள்பவா்கள் குற்றவாளிகள் ஆவா். இந்த குற்றத்திற்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

நாகை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கோயில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவா்களிடம் மணமகன் மற்றும் மணமகளின் ஆதாா் அட்டை மூலம் அவா்களது பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

குழந்தை திருமணங்கள் நடத்த பேச்சுவாா்த்தை நடந்தாலோ அல்லது திருமணம் நடைபெற்றாலோ, மாவட்ட சமூகநல அலுவலா் அல்லது இலவச உதவி எண்களான 1098 மற்றும் 181 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

சமூகநல விரிவாக்க அலுவலா்கள், ஊா்நல அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோரிடமும் புகாா் அளிக்கலாம். புகாா் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க